உலகின் மூன்றில் இரண்டு பங்கு சாகுபடி செய்யப்படாத நிலம் ஆப்ரிக்காவில் உள்ளது. அவற்றின் மூலம், உலகிற்கே உணவளிக்கும் சக்தி ஆப்ரிக்காவுக்கு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
வரும் இரண்டாயிரத்து ஐம்பதாம் ஆண்டில் உலக மக்கள் தொகை பத்து பில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்கு “விவசாயம்” ஒரு முக்கிய விவாத தலைப்பாக மாறியுள்ளது.
விவசாய உற்பத்தியை எழுபது சதவீதமாக உயர்த்த வேண்டும் என ஐ.நா. கூறுகிறது.
அதில் பெரும்பகுதி ஆப்ரிக்காவில் நடைபெற வேண்டும். இந்த நிலையில் பயிர் சாகுபடியை அதிகரிக்க, முன்னிலையில் இருக்கப் போவது, நவீன தொழில்நுட்பம்.
அவ்வாறு ஒரு தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆப்ரிக்காவில் மேற்கொள்ளப்படும் விவசாய முயற்சி குறித்த செய்தித் தொகுப்பு.