நடிகர் சிவாஜிகணேசன் மணிமண்டபத்தை அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே தமிழக அரசு அமைத்துள்ளது. சுமார் 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பல கோடி ரூபாய் செலவில் இந்த மணி மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட அவரது சிலை, இந்த மணி மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அக்டோபர் 1-ந் தேதியன்று சிவாஜிகணேசனின் 90-வது பிறந்த நாள் நிகழ்கிறது. அந்த தினத்தில் சிவாஜிகணேசன் மணிமண்டபத்தை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதை திறந்து வைப்பார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.