கொல்கத்தாவில் ஆண்டுதோறும் இந்துக்கடவுளான துர்காதேவியை போற்றும் விதமாக விமர்சையாக கொண்டாடப்படும் துர்கா பூஜை திருவிழா நீண்டகால பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது.
மேற்கு வங்கத்தில் மிகப்பெரியதும் மற்றும் மிக பிரபலமானதுமாக அறியப்படும் இவ்விழாவில், “மாதிரி அலங்காரங்கள்” என்று அறியப்படும் விரிவான மேடை அலங்காரங்கள், இங்கு வரும் மிகப்பெரிய கூட்டத்தை ஈர்க்கும் விதமாக இருக்கும்.
ஒன்பது நாட்கள் திருவிழாவில், ஆயிரக்கணக்கான “மாதிரி அலங்காரங்கள்” அந்நகரின் சுற்றுப்புறம் முழுவதும் உருவாக்கப்பட்டிருக்கும். .
இவை கடந்த சில ஆண்டுகளில், அவர்களின் படைப்பாற்றல் மற்றும் ஆடம்பரமான அமைப்பை பறைசாற்றும் ஒரு பிரபலமான காட்சியாக மாறிவிட்டது.
புகைப்பட கலைஞர் ரோனி சென் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அதன் லண்டன் நகரை கருப்பொருளாக் கொண்டுள்ள புகைப்படங்களையும், துர்கா தேவியின் சிலைக்கும் அணிவிக்கப்பட்டுள்ள தூய 22-காரட் தங்கத்தால் செய்யப்பட்ட புடவையின் ஒரு படங்களை எடுத்துள்ளார்.
22 கிலோ எடை கொண்ட இந்த தங்க புடவை, 6.2 கோடி ரூபாய் (62 மில்லியன்) மதிப்புடையது என்று கூறப்படுகிறது.
வடிவமைப்பாளர் அக்னிமித்திரா இந்நிகழ்ச்சிக்காக விரிவான அலங்கார வடிவமைப்புகளையும் மற்றும் பளபளப்பான கற்களையும் கொண்டு இந்த தங்க புடவையை உருவாக்கியுள்ளார்.
50 க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்கள் இரண்டரை மாதங்களுக்கும் மேலாக இந்த புடவையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை கூறியுள்ளது.
பக்கின்ஹாம் அரண்மனையை போன்ற வடிவமைக்கப்பட்டிருக்கும் மாதிரி அமைப்புக்குள்ளே இந்த சிலை காணப்படுகின்றது, இது திருவிழாவுக்காக அமைக்கப்பட்டிருக்கிறது மற்றும் இது நகரின் சந்தோஷ்மித்ரா சதுக்கத்தில் அமைந்துள்ளது.
மேலும் லண்லனில் காணப்படும் பிக் பென், டவர் பிரிட்ஜ் மற்றும் லண்டன் ஐ போன்ற மாதிரிகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
கொல்கத்தாவில் துர்கா பூஜை திருவிழா அவற்றின் ஆடம்பரமான அலங்காரங்களுக்காக அறியப்படுகின்றன, மற்றும் “மாதிரி அலங்காரங்களும்” இதற்கான போட்டியில் தற்போது நுழைந்துள்ளன.
அந்த காலங்களில் ஐகானிக் மஞ்சள் நிற டாக்ஸிகள், இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு இயக்கப்பட்ட மைத்ரேயி எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் பௌத்த பகோடா கட்டமைப்புகள் ஆகியவை இத்திருவிழாவின் கருப்பொருள்கள் இருந்தன.
இந்த பிக் பென் மாதிரி இத்திருவிழாவிற்காக உருவாக்கப்பட்டுள்ளது, இது இங்கு முதன்முறையாக அமைக்கப்படவில்லை.
2015ஆம் ஆண்டு பிக் பென் போன்று நிரந்தர தோற்றமளிக்கும் அமைப்பானது, அந்நகரத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவை லண்டனைப் போல புகழ்ப்பெற்று விளங்கும் விதமாக உருவாக்கும் நோக்கில் கட்டப்பட்டது.
இந்த ஆண்டு திருவிழாவில் தாய்லாந்திலுள்ள வெள்ளை கோவில், கொல்கத்தா நகரங்களின் நகர்ப்புற விரிவாக்கம், மற்றும் சுயப்புகைப்பட கலைகள் போன்ற மற்ற மாதிரிகளும் இடம்பெற்றிருந்தன.
தற்போதைய நிகழ்வுகள் அல்லது சமூகப் பிரச்சினைகளைப் பிரதிபலிக்க மதிரிகள் திருவிழாவில் இடம்பெறுவது ஒன்றும் வழக்கத்திற்கு மாறானது அல்ல. 2013 ஆண்டு பாலியல் வல்லுறவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது போன்று ஒரு அமைப்பும், அதே வேளையில் ஒரு படகு போன்ற வடிவமானது கங்கை நதியின் மாசுபாடுக்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டது.
இத்திருவிழா செப்டம்பர் 19 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவடைகிறது.