குடி குடியை கெடுக்கும், குடி நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு என நாம் பல இடங்களில் பார்த்து, படித்து அறிந்துள்ளோம். நாம் உட்கொள்ளும் மருந்துகளில் கூட ஆல்கஹால் கலப்பு இருக்க தான் செய்கிறது. நாம் குடிக்கும் அளவில் தான் அதன் தாக்கம் இருக்கிறது.
குடி போதையில் நடந்த எத்தனையோ சண்டைகள், விபத்துகளால் வாழ்க்கை, உயிரை இழந்த நபர்கள் இருக்கிறார்கள். ஆனால், இதெற்கெல்லாம் உச்சமாக ஒரு பெண்ணை கொன்று தின்று சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய தம்பதி!
ஒரு நாள் மது அருந்தும் போது, ரஷ்ய தம்பதிக்கும், மற்றொரு பெண்ணுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது, குடி போதையில் மோதல் பெரிதாக, சண்டை அதிகமானது. என்ன செய்கிறோம் என தெரியாத நிலையில், அந்த பெண்ணை கொன்று தின்றுள்ளனர் அந்த ரஷ்ய தம்பதி.
செல்ஃபீ!
குடி போதையில் அந்த பண்ணின் உடல் உறுப்புகளுடன் செல்ஃபீ எடுத்து போனில் அழிக்காமல் வைத்திருக்கிறார்கள். அந்த போன் தொலைந்தும் போனது. அந்த போன் வேறு நபரிடம் சிக்க, அப்போது தான் இந்த கொடூரமான படங்களை கண்டு அதிர்ந்து, அந்த நபர் போனை போலீசில் ஒப்படைத்துள்ளார்.
போலீஸ் விசாரணை!
உடனே 35 வயதுமிக்க அந்த ஜோடியை பற்றி விசாரணை துவக்கியது ரஷ்ய போலீஸ். அதில் இந்த தம்பதி தெற்கு க்ரஸ்நோடர் பகுதியை சேர்ந்தவர்கள் என அறியப்பட்டது. செப்டம்பர் 8ம் தேதி நடந்த சண்டையில், இந்த கொடூர கொலை நடந்துள்ளது.
மேலும் உறுப்புகள்!
மேலும், உப்பு நீரில் இடப்பட்ட சில உடல் உறுப்புகள் விசாரணையின் போது கிடைத்துள்ளது. அது மனித உடல் பாகமா, விலங்குகளின் உடல் பாகமா என விசாரணை நடத்த, ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர் ரஷ்ய போலீஸார்.