பாபுராஜாவும், கிரணும் கணவன் மனைவியாக கிராமத்தில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். ஒரு சூழ்நிலையில், கிரண் ஒருவரை கொலை செய்துவிடுகிறார். தன் மனைவியின் கௌரவம் காக்க செய்யாத கொலையை தான் செய்ததாக கிரண் கணவர் பாபுராஜா காவல்துறையிடம் சரண் அடைகிறார்.
அவர் அக்கொலையை செய்ய வில்லை என்பதை சிறப்பு புலனாய்வு அதிகாரியாக இருக்கும் பிருத்திவிராஜ் கண்டுபிடிக்கிறார்.
தான் குற்றவாளி இல்லை என நிருபிக்கப்பட்டால் தனது மனைவி களங்கமானவள் என இந்த ஊர் சொல்லும் என்ற பயத்தில், தன்னை குற்றவாளி என அறிவிக்க மன்றாடுகிறார் பாபுராஜா.
இறுதியில், பாபுராஜா தன் மனைவி கிரணின் களங்கத்தை காப்பாற்றினாரா? புலனாய்வு அதிகாரி பிருத்திவிராஜ், பாபு ராஜா குற்றமற்றவர் என்று நிருபித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
புலனாய்வு அதிகாரியாக நடித்திருக்கும் பிருத்திவிராஜ், போலீசுக்குண்டான தோற்றம் மிடுக்குடன் நடித்திருக்கிறார். உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க, இவர் எடுக்கும் முயற்சிகள் ரசிக்கும்படி உள்ளது. பொய்யான கொலைக் குற்றவாளியாக இப்படத்தின் இயக்குனர் பாபுராஜா நடித்து இருக்கிறார். தன் மனைவிக்காக கொலை குற்றத்தை ஏற்றுக் கொள்பவராக நடித்திருக்கிறார்.
பாபுராஜாவின் மனைவியாக நடித்திருக்கும் கிரண், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கொடுத்த வேலையை செய்திருக்கிறார் ஓவியா.
மலையாளத்தில் 2011ம் ஆண்டு வெளியான ‘மனுஷிய மிருகம்’ என்ற படத்தை தமிழில் டப் செய்யப்பட்டு ‘போலீஸ் ராஜ்ஜியம்’ என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. தன் மனைவி மீது பாசம் வைத்துள்ள ஒருவன், பாசத்திற்காக, செய்யாத குற்றத்தை ஏற்று, ஜெயிலுக்கு செல்கிறான். தன் வேலையை மீது பாசம் வைத்துள்ள ஒருவன், செய்யாத குற்றத்திற்கு தண்டனை பெற்று வரும் ஒருவரை விடுவிக்க துடிக்கும் போலீஸின் வாழ்க்கையும் படமாக்கி இருக்கிறார் இயக்குனர்.
அன்வர் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். சுரேஷின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘போலீஸ் ராஜ்ஜியம்’ திறமை.