‘ஜிகர்தண்டா’ படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து பிரபலமானவர் பாபிசிம்ஹா தற்போது ‘உறுமீன்’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக ரேஷ்மிமேனன் நடிக்கிறார்.
படப்பிடிப்பில் பாபிசிம்ஹாவுக்கும் ரேஷ்மி மேனனுக்கும் காதல் மலர்ந்ததாக கிசுசிசுக்கள் வெளியானது. இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் செய்திகள் பரவின. இருவீட்டு பெற்றோரும் திருமணத்துக்கு சம்மதித்து விட்டதாக கூறப்பட்டது.
இதுகுறித்து பாபிசிம்ஹாவிடம் கேட்டபோது அவர் மறுத்தார். எனக்கு இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. ரேஷ்மி மேனனுடன் நட்பாகத்தான் பழகுகிறேன் எங்களுக்குள் காதல் இல்லை. ரேஷ்மியை திருமணம் செய்யப்போவதாக வந்த செய்தியில் உண்மை இல்லை, வதந்திதான் என்றார்.