இந்தோனேஷியாவின் ஜாவாவிலுள்ள பாடும் பறவைகளை வனவிலங்குச் சந்தையில் பலரும் வாங்குவதால் அவை அழிவின் விளிம்பில் உள்ளன.
இனிமையான குரலுக்காக இவற்றை வீட்டில் வளர்க்க விரும்புபவர்கள் அதிக விலை கொடுத்து வாங்குவதால் இவை காடுகளில் கண்ணி வைத்து பிடிக்கப்படுகின்றன. இது உடனடியாக தடுக்கப்படாவிட்டால் அடுத்த பத்து ஆண்டுகளில் இவற்றின் சில இனங்கள் முற்றாக அழிந்துவிடும் ஆபத்து இருக்கிறது.