உன்
கண்கள் பனித்திருக்கிறதே
ஏன் என்றேன் ..
வெங்காயம்
வெட்டிக்கொண்டிருந்தேன் எனப் பதில் சொன்னாள் !
வெங்காயக் கண்ணீருக்கும்
வெந்த கண்ணீருக்கும்
வித்தியாசம் தெரியாதவனா நான் என்ன ?
உடல் உஷ்ணமானால்
வேயர்வையாகும்
உள்ளம் பஸ்பமானால் கண்ணீராகும் ..
முப்தா மொஹமட்