தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியவர் நடிகை புவனேஸ்வரி.
விபச்சார வழக்கில் கைதாகியிருந்த இவர் மூத்த தமிழ் நடிகைகளை பற்றி சொன்ன விஷயம் அப்போது மிகப்பெரிய சலசலப்பை உண்டாக்கியது.
தற்போது இவரின் மகன் சீனிவாசன் இளம்பெண் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காக போலிசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மருத்துவகல்லூரியில் படித்துவரும் அனுகிரஹா என்ற பெண்ணுடன் பேஸ்புக் மூலம் பழகிய சீனிவாசன் திருமணம் செய்யும்படி வற்புறுத்தியுள்ளார்.
அந்த பெண் மறுத்ததையடுத்து ஆத்திரமடைந்த சீனிவாசன் அவரின் வீட்டின் அருகே பெட்ரோலை ஊற்றி எரித்துவிடுவேன் என மிரட்டல் விடுத்து வீட்டில் பொருத்தியிருந்த கேமராவை அடித்து நொறுக்கியுள்ளார்.
அதன் பின் பொலிசார் சீனிவாசன் மீது கொலை மிரட்டல், ஆபத்தான பொருட்களை பயன்படுத்துதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய வழக்குகளின் கீழ் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் போலீசார் கூறுகையில், காதல் விவகாரம் தொடர்பாக பெண்கள் தைரியமாக வெளியில் சொல்ல வேண்டும் என்றும், சீனிவாசன் மீது ஜாமீனில் வெளி வரமுடியாத சட்டப் பிரிவுகளின் கீழ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.