சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மனதை கவர்ந்திருக்கும், ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ திரைப்படத்தின் நாயகி கரீனா கபூர், வித்தியாசமான கதையம்சங்களைக் கொண்ட திரைப்படங்களில் நடித்து, தனக்கென தனி முத்திரை பதித்தவர்.
நடிகர் சயீப் அலி கானை காதலித்து கடந்த 2012-ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்ட பிறகும், தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டிருக்கிறார்.
‘பஜ்ரங்கி பாய்ஜான்’ வெற்றியை அடுத்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய கரீனா, ‘குழந்தை பெற்றுக்கொள்ள ஆசையாக இருக்கிறது’ என தெரிவித்துள்ளார். ஆனால், இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு பிறகே குழந்தை பெற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
திருமணமான ஹீரோயின்களுக்கு பெரிய ஹீரோக்களுடன் வாய்ப்பு கிடைப்பதில்லை என்ற நிலை திரையுலகில் உருவாகியுள்ளது. இந்நிலையில், திருமணம் ஆன பிறகும் பாலிவுட்டின் எல்லா கான்களுடனும் கரீனா இப்போதும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.