பிரபல ரிவியில் முன்னனி தொகுப்பாளினியாக வலம்வரும் பிரியங்காவின் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்?
மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்த இவர் தனது பள்ளிப் படிப்பினை பெங்களூரில் முடித்து கல்லூரி படிப்பினை சென்னையில் முடித்துள்ளார்.
அதன் பின்பு மிகச் சரளமாக தமிழ் பேச ஆரம்பித்த இவர் ரேடியோ மெர்ச்சியில் சிறிது காலம் வேலை செய்துள்ளார். அதன்பின்பு காதல் திருமணம் செய்த இவர், அந்த வாழ்க்கையில் ஏற்பட்ட மனக்கசப்பினால் கணவரை பிரிந்துவிட்டார்.
மனதளவில் உடைந்த போன பிரியங்கா சென்னையில் நடந்த ஐபிஎல் விளையாட்டில் பந்து எடுத்துப்போடும் வேலையினை செய்து வந்த நிலையில் மா.கா.பா-வினை சந்தித்துள்ளார்.
பிரியங்காவில் கஷ்டத்தினை அறிந்த அவர் பிரபல ரிவியில் தொகுப்பாளினியாக சிபாரிசு செய்துள்ளார். அதன் பின்பு தான் பிரியங்காவில் வாழ்க்கை வண்ணமயமாக மாறியுள்ளது.
தற்போது கூட பிரியங்கா மா.கா.பா-வைப் பற்றி கூறும் பொழுது, காதல் திருமணம் செய்த காரணத்தால் பெற்றோரால் ஒதுக்கப்பட்டவர். தற்போது அவராலே தனது வாழ்க்கை சந்தோஷமாக உள்ளது என்று தெரிவிக்கிறார்.
தொகுப்பாளினியாக மாறிய பிரியங்கா தான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் கமெரா மேனாக வேலை செய்தவரிடம் தனது வாழ்க்கையில் நிகழ்ந்த சோகத்தினைக் கூற அவருக்கு பிரியங்காவினை பிடித்துவிட்டதால் அவரை மறுமணம் செய்துள்ளார்.
எனது திருமணம் இரணடாவது திருமணம் தான் என்று அவரே கூறியுள்ளார். மா.கா.பா செய்த உதவி பிரியங்காவிற்கு மீண்டுமொரு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். மேடையில் சிரித்து அனைவரையும் மகிழ்விக்கும் பிரியாவின் வாழ்க்கையில் இம்புட்டு சோகமா?