ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’ படங்கள் உலகமெங்கும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக வசூலில் அதிக சாதனை படைத்தது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அடுத்ததாக ராஜமௌலி யாரை வைத்து படம் இயக்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சமீபத்தில் ராஜமௌலி அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்குவதாகவும், அவரை அடுத்து ராம் சரணை வைத்து படம் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது இவரின் புதிய படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ராஜமௌலி அடுத்ததாக டபுள் ஹீரோ சப்ஜெட் கதையை உருவாக்கி இருப்பதாகவும், இதில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் கதாநாயகன்களாக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் படம் ‘பாகுபலி 3’ ஆக உருவாகும் என்று பலரும் கூறி வருகின்றனர்.