மெர்சல் சர்ச்சை வெடித்தபோது விஜய்யின் மதம், அரசியல் நோக்கம் என பல விஷயங்கள் விமர்சனத்திற்கு உள்ளானது.
தற்போது திருப்பதி உண்டியல் பற்றி தவறாக பேசியதாக விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்து மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில் கூறப்பட்டிருப்பதாவது..
கடந்த 22ந் தேதி நடந்த ஒரு படவிழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் உலக இந்துக்களின் புனித கோவிலான திருப்பதி கோவில் உண்டியலை லஞ்சம் பெறும் உண்டியல் என்று கிண்டல் செய்துள்ளார். இது இந்துக்களையும், இந்துக்களின் மத நம்பிக்கையையும் இழிவுபடுத்தும் செயலாகும். கோவில் உண்டியலில் பணம் போட்டால் பாஸாகிவிடுவாயா? என்றும் கேட்டிருக்கிறார். கிறிஸ்தவரான எஸ்.ஏ.சந்திரசேகர் இந்து மத நம்பிக்கையில் தலையிட உரிமை இல்லை. அதனால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.