இமாச்சலப்பிரதேசம் மாநில தலைநகர் சிம்லாவில் உள்ள இராணுவ மையத்தில் பணியாற்றி வரும் அதிகாரியின் 21 வயது மகள் மாடலிங் துறையில் நுழைவதற்காக வாய்ப்பு தேடி வந்துள்ளார்.
அவருக்கு உதவுவதாக அந்தப் பெண்ணின் தந்தையுடன் பணியாற்றும் இராணுவ கர்னல் பரம்ஜீத் சிங்(56) தெரிவித்துள்ளார். கடந்த 21 ஆம் திகதி சிம்லா நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அந்தப் பெண்ணை பலவந்தப்படுத்தி மது குடிக்க வைத்த கர்னல் பரம்ஜீத் சிங், தனது மகளை கற்பழித்து விட்டதாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்தார்
கடந்த 22 ஆம் திகதி பாதிக்கப்பட்ட இளம்பெண் மற்றும் கர்னல் பரம்ஜீத் சிங் ஆகியோரிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவின் அடிப்படையில் கர்னல் பரம்ஜீத் சிங்-கை கைது செய்த போலீசார் அவரிடம் கடந்த 4 நாட்களாக விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று சிம்லா மாவட்ட நீதிமன்றத்தில் கர்னல் பரம்ஜீத் சிங் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை டிசம்பர் 8 ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் அடைக்குமாறு நீதிபதி கனிகா குப்தா உத்தரவிட்டார்.