அவுஸ்திரேலியாவில் ஒரு பாலின திருமணத்தை சட்டபூர்வமாக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, எம் பி ஒருவர் அவரது காதலரிடம் தன் காதலை வெளிப்படுத்தினார்.
பொது கேலரியில் அமர்ந்திருந்த ரியான் பொலுஜரிடம், நாடாளுமன்ற உறுப்பினரான டிம் வில்சன் தன் காதலை வெளிப்படுத்த, ஒன்பது ஆண்டுகளுக்கு முன் அவர்கள் அளித்துக் கொண்ட உறுதிமொழியின்படி, டிம்மின் காதலை ஒப்புக்கொண்டார் ரியான்.
ஒரு பாலின திருமணம் தொடர்பான மசோதாவை செனட்டில் நிறைவேற்றிய ஐந்து நாட்களுக்கு பின் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்காக திங்களன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
நாடாளுமன்ற அமர்வுகளில் காதலை வெளிப்படுத்திய முதல் எம்.பி இவர்தான் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
“நான் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் உள்ளது. ரியான், என்னைத் திருமணம் செய்துக் கொள்ள சம்மதமா?” என்று டிம் கேட்டார்.
டிம் கேட்ட இக்கேள்வி, கூட்டத்தில் அமர்ந்தவர்களினிடையே உற்சாகத்தையும் கைத்தட்டல்களையும் எழுப்பியது. இருவரையும் வாழ்த்திய சபாநாயகர், பொலுஜரின் சம்மதத்தை அதிகாரப்பூர்வமாக பாராளுமன்ற விவாத பதிவேட்டில் பதிவேற்றினார்.
ஒரு பாலின திருமணம் குறித்து நடைபெற்ற தேசிய விவாதம் தங்களின் உறவிற்கு உற்சாகத்தை அளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் டிம் வில்சன் தெரிவித்தார்.
முன்னதாக, ஓரின சேர்க்கை இளைஞராக வளர்ந்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட அவர், அதை சுற்றியுள்ள களங்கத்தால் ஏற்பட்ட போராட்டத்தை குறித்தும் பேசினார்.
கடந்த நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில், ஒரே பாலின திருமணங்களை சட்டப்பூர்வமானதாக்குவதற்கு ஆதரவாக மிகப்பெரிய அளவில் மக்கள் வாக்களித்திருந்தனர்.
அதை பயன்படுத்தியும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. தொடர்ந்து வேதனைப்பட்டு வந்த அவரின் கண் பார்வை தற்போது சிறிது சிறிதாக மங்கி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் கண் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது.
இதற்கிடையே, தனது போட்டோவை ‘பேஸ்புக்’ சமூக வலை ளத்தில் வெளியிட்ட கேட் கேளிங்கர் தனது நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார். கண்ணுக்குள் பச்சை குத்தியதால் தான் படும் கஷ்டங்களையும், பார்வை பறி போகும் அபாயம் இருப்பதையும் வெளியிட்டுள்ளார்.
மேலும், என்னை போன்று யாரும் தங்களது கண்ணில் பச்சை குத்த வேண்டாம். என் நடவடிக்கையை பின்பற்ற வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தனது கண்ணில் தவறுதலாக பச்சை குத்தியதாக சம்பந்தப்பட்ட டாக்டர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.