தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகை நமீதா. இவர் கடைசியாக BiggBoss என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.
ஆனால் நிகழ்ச்சியால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் இறுதி நிகழ்ச்சிக்கு கூட வரவில்லை.
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அன்று நமீதாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டிருக்கிறார் வீர். இதுகுறித்து நமீதா, நான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த அன்று தான் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வீர் என்னிடம் கேட்டார்.
அவர் கேட்காவிட்டால் நானே கேட்டிருந்திருப்பேன். வீர் கடற்கரையில் வைத்து எனக்கு ப்ரொபோஸ் செய்தார். அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அவருக்கு பதில் அளிக்க வேண்டிய அந்த நேரத்தில் மகிழ்ச்சியில் நான் அழ துவங்கினேன் என்றார்.