பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மக்களிடம் மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பேர் வாழ்க்கை இப்போது மாறியிருக்கிறது. அதாவது சினிமாவில் ஒரு நல்ல இடத்தில் வெற்றிநடைபோட்டு வருகின்றனர்.
அப்படி அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்ற ஆனந்த் அவர்களுக்கு திருமணம் முடிந்துள்ளது. தன்னுடைய நீண்ட நாள் காதலியான பரோடா என்பவரை டிசம்பர் 3ம் தேதி திருமணம் செய்துள்ளார்.
அவர்களது திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.