இரண்டு வாழைப்பழங்களை கையில் ஏந்தி சன்னிலியோன் போஸ் கொடுத்தபோதே தெரிந்துவிட்டது. ஏதோ வில்லங்கம்தான்.
போதாக்குறைக்கு படத்தின் இயக்குநரும் கொஞ்சம் ‘ஏ’டாகூடமான ஆளுதான். ‘ஏ’ சர்ட்டிஃபிகேட் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்கிற மகத்தான சாதனையை (!) செய்திருக்கும் ‘கிராண்ட் மஸ்தி’ படத்தின் கதாசிரியர் மிலப் ஜாவேரி.
‘மஸ்திஸாதே’ என்று மஜாவாக டைட்டில் வைத்து இது இளைஞர்களை ‘எழுச்சி’ படுத்தி ஊக்குவிக்கும் திரைப்படம் என்று பூஜை போட்ட அன்றே ‘வெளிப்படையாக’ அறிவித்து விட்டார்கள். சன்னி லியோனுக்கு டபுள் ரோல். ஒரு லியோன் என்றாலே சும்மா அதிரும். டபுள் என்றால் டக்கர் ஷோதான் என்று ஆவலோடு காத்திருக்க ஆரம்பித்தார்கள் இளைஞர்கள். எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப சன்னியும் ‘தாராளமாகவே’
பெர்ஃபாமன்ஸ் காட்டியிருக்கிறார் என்று கேள்வி.
கடந்த மே மாதம் ரிலீஸ் என்று, கடந்த வருட இறுதியிலேயே அறிவித்தும் விட்டார்கள். ஆனால் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் வெலவெலத்துப் போனார்கள். தாம் பெற்ற இன்பத்தை இந்த வையகம் பெற்றுவிடக்கூடாது என்கிற நல்லெண்ணத்துடன் படத்துக்கு சான்றிதழ் தர மறுத்துவிட்டார்கள். ரிவைஸிங் கமிட்டியிலும் ஆவலோடு பார்த்த தணிக்கைக் குழுவினர், “இந்தப் படத்தைப் பார்த்தா பசங்க கெட்டுடுவாங்க” என்று மீண்டும் மறுத்துவிட்டார்கள்.
பஞ்சாயத்து ட்ரிப்யூனலுக்கு போயிருக்கிறது. அங்கேயும் அப்பீல் அப்பீட்டு ஆகிவிட்டால், யூட்யூப்பில் வெளியிடப்பட்டிருக்கும் படத்தின் டிரைலரை பார்த்து கை தட்டிக் கொள்ள வேண்டியதுதான்.“தடை போடுற லெவலுக்கு அப்படி என்னதான் படத்துலே இருக்கு?” என்று ஆவேசம் அடைந்திருக்கிறார்கள் இளைஞர்கள். ‘மஸ்திஸாதே’வுக்கு தடை உறுதிப்பட்டால், இவர்களெல்லாம் மொத்தமாக தெருவுக்கு வந்து போராடி நிஜமாகவே புரட்சி, கிரட்சி வந்துவிடுமோ என்று கொஞ்சம் பயமாகதான் இருக்கிறது.