சினிமாக்களில் நடிகைகளுக்கு பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாக சிலர் சமீபத்தில் சொல்லி வருகிறார்கள். பலரும் இது பற்றி பேச தயங்குகிறார்கள் என்பதே உண்மை.
சமீபத்தில் ஹிந்தி சினிமாவை சேர்ந்த நடிகை ஒருவருக்கு பெரும் மோசடி நடந்துள்ளது. ஆபாச இணையதளத்தில் அவரது புகைப்படம் வெளியானதை பார்த்து அந்த நடிகை அதிர்ச்சியாகியுள்ளார்.
ஆனால் அவர் தைரியமாக முன்வந்து காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தில் இயக்குனர்கள் உபேந்திரா ராய், ராஜன் அகர்வால் ஆகியோர் சம்மந்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த விசாரணையில் அந்த இயக்குனர்கள் பட வாய்ப்புகள் ஏற்படுத்தி தருவதாக கூறி அந்த நடிகைக்கு ஆட்சேபணை விதித்து அரை நிர்வாணமாக போட்டோ, வீடியோ எடுத்து ஆபாச தளங்களில் பதிவேற்றம் செய்தது தெரிய வந்துள்ளது.
இந்த விசயத்தில் ராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். உபேந்திரா தலை மறைவாகிவிட்டாராம்.