தெலுங்கு சினிமாவை சேர்ந்த பிரபல நடிகர் பிரதீப் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஹைதராபாத் சிட்டி போலிஸ் பல இடங்களில் சோதனை நடத்தியுள்ளது.
இதில் பஞ்சாரா ஹில்ஸ் ரோட்டில் நடிகர் பிரதீப் தன் காருடன் போலிஸில் சிக்கியுள்ளார். குடித்து விட்டு வாகனம் ஓட்டுகிறார்களா என்ற சோதனையின் போது போது அவர் அதீத போதையில் இருந்தது தெரியவந்துள்ளது.
மேலும் அவரின் ரத்தத்தில் ஆல்கஹால் அளவு 180 ஆக இருந்துள்ளது. இதனால் போலிஸ் அவரை கைது செய்ததோடு காரையும் பறிமுதல் செய்துள்ளது. இது போல பலர் சிக்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து அவருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்ட போது பிரதீப் நான் குடித்து விட்டு வண்டி ஓட்டவில்லை என சொன்னதையே திரும்ப திரும்ப கூறியுள்ளார்.
மேலும் அவருக்கு அபராதமும், சிறை தண்டனையின் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாம். சமீபத்தில் இவர் செக் மோசடி வழக்கிலும் சிக்கியுள்ளார். பின் நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ளார்.