‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பரபரப்பாக பேசப்பட்டவர் ஓவியா. இதையடுத்து பட வாய்ப்புகளும், விளம்பர வாய்ப்புகளும் அவரை தேடி வந்தன.
அவற்றில் நடிக்க அதிக சம்பளம் கேட்டதாக கூறப்பட்டது. என்றாலும் பின்னர் எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. தற்போது ராகவா லாரன்சுடன் ‘காஞ்சனா-3’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் பல படங்களை ஓவியா தவிர்த்து விட்டதாக கூறப்படும் நிலையில், அவர் அடுத்ததாக வில்லன் நடிகர் ஒருவருடன் நடிக்க இருக்கிறார்.
‘ரெமோ’ படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தவர் அசன்பால். இவர் தமிழில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் இவருடைய ஜோடியாக ஓவியா நடிக்கிறார். அசன்பாலும் ஓவியாவும், கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர்கள். ஒரே பகுதியில் வசிப்பவர்கள். ஏற்கனவே அறிமுகமானவர்கள். இப்போது புதிய படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.