மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள 24-வது தெற்கு பர்கானா சோனார்பூர் பகுதியை சேர்ந்த சுமார் 60 வயது மூதாட்டி நேற்று திடீரென்று காணாமல் போனார்.
அவரை உறவினர்கள் தேடிவந்த நிலையில் சக்பேரியா கிராமத்தில் உள்ள தனது வீட்டின் அருகேயுள்ள வெட்டவெளியில் அரை நிர்வாண கோலத்தில் இன்று காலை அவர் பிணமாக கிடந்தார்.
இதுதொடர்பான தகவல் அறிந்ததும் விரைந்துவந்த போலீசார், பிரேதத்தை கைப்பற்றி பரிசோதணைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.
இறந்து கிடந்த மூதாட்டியின் முகம் சிதைக்கப்பட்டு கிடந்துள்ளது. அருகாமையில் சில மது பாட்டில்களும் கிடந்தன. இவற்றின் அடிப்படையில் அவர் ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்டு, அடித்து கொல்லப்பட்டிருக்கலாம் என கருதும் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.