தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நாயகனாக உருவெடுத்தவர் சக்தி. இவர் இயக்குனர் பி.வாசுவின் மகன். இவர் நாயகனாக நடித்த ‘தொட்டால் பூ மலரும்’, ‘மகேஷ் சரண்யா மற்றும் பலர்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ஆட்ட நாயகன்’ உள்ளிட்ட பல படங்கள் பெரிய அளவில் வெற்றியடையாவிட்டாலும், தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹீரோவாகவே வலம் வந்தார்.
இவர் தற்போது ‘படம் பேசும்’, ‘தற்காப்பு’ ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில், ‘தற்காப்பு’ படத்தில் இருந்து தனது பெயரை சக்திவேல் வாசு என்று மாற்றி வைத்துள்ளார். மேலும், இப்படத்தில் இவருடன் சமுத்திரகனியும் ஒரு புதுமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை ஆர்.பி.ரவி இயக்குகிறார். பைசல் இசையமைக்கிறார். ஜோன்ஸ் ஆனந்த் ஒளிப்பதிவையும் ஷான் லோகேஷ் எடிட்டிங்கையும் கவனிக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அடுத்தமாதம் வெளியிட இருக்கிறார்கள். இப்படத்தை ‘க்னைடோஸ்கோப் நிறுவனம் சார்பாக செல்வமுத்து, மஞ்சுநாத் இணைந்து தயாரிக்கிறார்கள். மேலும், பழனி, முருகேசன் ஆகியோரும் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.