பாகுபலி படத்தில் அனுஷ்கா மற்றும் பிரபாஸ் இணைந்து நடித்த பிறகு அவர்கள் இருவரையும் இணைத்து பல கிசுகிசுக்கள் வர துவங்கிவிட்டன. இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் செய்திகள் பரவியது.
தற்போது ஒரு பேட்டியில் இது பற்றி விளக்கமளித்த அனுஷ்கா, “எங்களுக்கு நடுவில் நட்பை தவிர வேறு எதுவும் இல்லை. என் திருமணம் பற்றி பலர் பேசுவது எனக்கு சந்தோசம்தான். ஆனால் நான் இன்னும் என் மனதிற்கு பிடித்தவரை பார்க்கவில்லை. அப்படி ஒருவரை சந்தித்து, எனக்கு பிடித்தால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிடுவேன்” என தெரிவித்துள்ளார்.