‘நான் கடவுள்’ படம் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமானவர் ராஜேந்திரன். இப்படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கித் தந்ததால் நான் கடவுள் ராஜேந்திரன் என்று அழைக்கப்பட்டார்.
வில்லனாக மிரட்டிய இவர் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘திருடன் போலீஸ்’, ‘தண்ணில கண்டம்’ ஆகிய படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து காமெடியன் நடிகருக்கான அந்தஸ்தை பெற்றார். தற்போது இவர் பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார்.
தற்போது கண்ணீர் அஞ்சலி என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதனை பிரபலப்படுத்துவதற்காக, அவருடைய புகைப்படத்தை வைத்து கண்ணீர் அஞ்சலி என்ற பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள், ராஜேந்திரன் இறந்து விட்டதாக நினைத்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
மேலும், கண்ணீர் அஞ்சலி படத்தில் ஹீரோவாக நடிக்கும் கருணாகரனுக்கும், கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. இப்படத்தை குகன் இயக்கி வருகிறார்.
இதற்கிடையே, ராஜேந்திரனை ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சகலகலா வல்லவன் அப்பாடக்கர்’ படத்தில் நடிக்க இரண்டு நாட்கள் கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள். ஆனால் அந்த காட்சியை ராஜேந்திரன் முடித்துக் கொடுக்க 15 நாட்கள் ஆகிவிட்டதாம். அத்தனை நாட்களில் நிறைய டேக்குகள் வாங்கி படக்குழுவினரை டென்ஷன் ஆக்கியுள்ளார்.