வீடுபுகுந்து கொள்ளை அடித்ததாக பிரபல தெலுங்கு நடிகரை போலீஸ் கைது செய்திருப்பது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சாம்ராட் ரெட்டி தன் வீட்டுக்குள் நுழைந்து 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடி சென்றுவிட்டதாக அவரது மனைவியே புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக இதற்கு முன்பே புகார் அளித்திருந்த அவரது மனைவி ஹர்ஷிதா புகார் அளித்தார். அந்த வழக்கில் சாம்ராட் ரெட்டிக்கு கோர்ட் முன்ஜாமீன் அளித்திருந்தது.
ஜாமீன் கிடைத்த மறுநாள் (ஜனவரி 13ம் தேதி) அவர் ஹர்ஷிதா தங்கியிருந்த அபார்ட்மென்டுக்கு சென்று நகை மற்றும் மற்ற பொருட்களை திருடியுள்ளார். அதுமட்டுமின்றி சிசிடிவி காமெராவையும் அடித்து நொறுக்கியுள்ளார்.
ஹர்ஷிதாவின் புகாரை தொடர்ந்து போலீஸ் அவரை கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளது.