தமிழ் திரை உலகின் பிதாமகன் என்றும், இயக்குனர் சிகரம் என்றும் அழைக்கப்பட்டவர் கே.பாலச்சந்தர். சினிமாவின் மிக உயரிய தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர். 1981-ம் ஆண்டு கவிதாலயா என்ற சினிமா படதயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.
முதன் முதலில் ரஜினியை வைத்து நெற்றிக்கண் படத்தை எடுத்தார். அண்ணாமலை, ரோஜா, முத்து, சாமி, திருமலை, குசேலன் உள்பட 63 படங்களை தயாரித்தார். தெலுங்கு, இந்தி, கன்னடத்திலும் படங்களை தயாரித்தார். பட விநியோகத்திலும் ஈடுபட்டார். கவிதாலயா நிறுவனத்தில் பாலசந்தரின் மனைவி ராகம் பாலச்சந்தர், மகள் புஷ்பா கந்தசாமி ஆகியோர் பங்குத்தாரர்களாக செயல்பட்டனர்.
கவிதாலயா நிறுவனம் சார்பில் வங்கியில் கடன் பெறப்பட்டது. கடன் திருப்பி செலுத்தப்படாததால் சொத்துக்கள் ஏலம் விடப்படும் என்று வங்கி நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் கவிதாலயா நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,