கடந்த வருடம் காமெடி நடிகர் தாடி பாலாஜி மீது பல குற்றச்சாட்டுகள் வைத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிந்திருந்தார் அவரது மனைவி நித்யா. தன்னையும், தன் மகளையும் குடித்துவிட்டு கொலை செய்ய முயற்சிப்பதாகவும், தவறாக பேசுவதும், ஜாதி பற்றி விமர்சிக்கிறார் என பல விஷயங்களை கூறியிருந்தார்.
பின் அவர்களது பிரச்சனையில் போலீஸ் தலையிட்டு தற்போது இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில் நடிகர் தாடி பாலாஜி மொத்த பிரச்சனை குறித்து அதிர்ச்சி பேட்டியளித்துள்ளார். அதில் அவர், என் மனைவி மீது நான் வைத்த காதலே எல்லா பிரச்சனைக்கும் காரணம். அவர் கல்யாணத்துக்கு பிறகு ஜாலியாக இருக்க வேண்டும் என்று அவருக்கு நிறைய சுதந்திரம் கொடுத்தேன். ஆனால் அதை தவறாக பயன்படுத்தி இவ்வளவு பிரச்சனைகளை நிகழ்த்திவிட்டார்.
அவருக்கும், ஜிம் டிரைனர் பாசில் என்பவருக்கு தவறான தொடர்பு இருக்கிறது, அதை நான் கண்டித்து நிறைய முறை அவரிடம் கூறியிருக்கிறேன், அதற்கான ஆதாரமும் நிறைய இருக்கிறது, சம்பவங்களும் இருக்கின்றன என பேசியுள்ளார்.