கர்நாடகா மாநிலம் உத்தரகன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்த்தி என்ற 8 வயது சிறுமி கடந்த செவ்வாய்க்கிழமை தன் வீட்டு வாசலில் தம்பியுடன் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது பசு மாடு ஒன்று மிக வேகமாக வந்தது. தனது கூரிய கொம்பினால் ஆர்த்தியின் தம்பியை முட்ட முயற்சி செய்தது. அதனை உணர்ந்த ஆர்த்தி வேகமாக சிறுவனை தூக்கினாள். மாட்டை விரட்டிய போது அது செல்ல வில்லை.
அலறல் சத்தம் கேட்டு வந்த சிறுமியின் தந்தை மாட்டை விரட்டினார். தனது தம்பியை காப்பாற்ற சிறுமி செய்த செயல்கள் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. அதனை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, சிறுமிக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது. சிறிய வயதில் சிறுமியின் சமயோசித செயல் மற்றும் தைரியம் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. வேறு எதையும் யோசிக்காமல் சிறுவனை காப்பாற்றிய ஆர்த்திக்கு உள்ளூர் மக்கள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.