தலைவி ஓவியா BiggBoss நிகழ்ச்சிக்கு பிறகு ராகவா லாரன்ஸுடன் காஞ்சனா படத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது படப்பிடிப்பில் எடுக்கப்படும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகிய வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் BiggBoss நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா தன்னுடைய சம்பளத்தை உயர்த்திவிட்டதாகவும், களவாணி 2 படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் நிறைய செய்திகள் வந்தன.
ஆனால் இந்த இரண்டு தகவல்களை மறுத்துள்ளார் ஓவியா. தான் இதுவரை சம்பளம் எதுவும் உயர்த்தவில்லை என்றும் களவாணி 2 படத்தில் நடிகையாக தான் நடிப்பதாகவும் கூறியுள்ளார்.