களவாணி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஓவியா. இப்படத்தில் இவருடைய நடிப்பு அதிகம் பேசப்பட்டது. அதன்பின் படங்களில் நடித்தாலும், அந்தளவிற்கு பெயரை பெற்றுத் தரவில்லை. சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பல ரசிகர்களை தன வசமாக்கினார்.
அதன் பின் ஓவியாவிற்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளது. தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காஞ்சனா 3’ படத்திலும், சற்குணம் இயக்கத்தில் ‘களவாணி 2’ படத்திலும் நடித்து வருகிறார்.
தற்போது ‘காஞ்சனா 3’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் துப்புறப்பணியாளர்கள் பயன்படுத்தும், கொசு மருந்து அடிக்கும் இயந்திரத்தை வைத்து படப்பிடிப்பு முழுவதும் அடித்திருக்கிறார் ஓவியா. இவரது செயலைப் பார்த்து படக்குழுவினர் அனைவரும் பாராட்டி இருக்கிறார்கள்.