பிரபல நடிகை ஸ்ரீதேவி சென்ற மாதம் துபாய்க்கு ஒரு திருமண விழாவில் கலந்துகொள்ள குடும்பத்துடன் சென்றார். அங்கு ஹோட்டலில் மர்மமான முறையில் அவர் இறந்துகிடந்தது சர்ச்சையானது.
அவரின் மரணம் பற்றி பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில் அவற்றை களையும் விதமாக ஸ்ரீதேவியின் கணவர் ஒரு டாக்குமெண்டரி படத்தை தயாரிக்கவுள்ளார்.
அந்த ஆவண படத்தை சேகர் கபூர் இயக்கவுள்ளார். மேலும் அந்த படத்தில் ஸ்ரீதேவி குடும்பத்தினருடன் எடுத்த அரிய புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படம் ஸ்ரீதேவியின் மரணம் பற்றிய மர்மத்தையும் ரசிகர்களுக்கு விளக்கும் விதத்தில் இருக்கும் என போனி கபூர் தெரிவித்துள்ளார்.