தெலுங்கு பட உலகில் முன்னணி நாயகனாக வலம் வரும் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் இந்திய சினிமாவிலும் பிரபலமாகி இருக்கிறார்.
பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் தற்போது சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார். பாகுபலி நடிக்கும் போது, பிரபாசுக்கும், அனுஷ்கா ஷெட்டிக்கும் காதல் ஏற்பட்டதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் தகவல் வெளியானது. அதனை இருவருமே மறுத்த நிலையில், அடிக்கடி கிசுகிசுக்கள் வந்த வண்ணமாகவே இருக்கின்றன.
இந்நிலையில், நடிகர் பிரபாஸுக்கும், சிரஞ்சீவியின் உறவுக்கார பெண்ணும், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் நாயகியுமான நிஹாரிகாவுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இருவருக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகிய நிலையில், இந்த தகவல் குறித்து சிரஞ்சீவி குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து சிரஞ்சீவி கூறும் போது,
நிஹாரிகா அவரது அடுத்தடுத்த படங்களில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவருக்கு திருமணம் செய்து வைப்பது குறித்து தற்போதைக்கு எந்த திட்டமும் இல்லை என்று கூறியிருக்கிறார்.