ஜப்பானின் துறைமுக நகரமான ஒசாகாவிலிருந்து கடந்த 25-ம் தேதி நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமுக்குச் சென்ற கே.எல்.எம் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான B777 PH-BVB பயணிகள் விமானம், விமான நிலையத்தை அடைந்த போது, திடீரென அங்கு கடும் புயல் வீசியது.
இருப்பினும் சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி புயலுடன் கடுமையாகப் போராடி விமானத்தை தரையிறக்கினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.