`வெண்மேகம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இஷாரா நாயர். தொடர்ந்து `பப்பாளி’, `சதுரங்க வேட்டை’ உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். இதில் `சதுரங்க வேட்டை’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் பெயர் சொல்லும் படமாகவும் அமைந்தது.
இருப்பினும் நாயகி அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகவில்லை. பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு `இவன் யாரென்று தெரிகிறதா’ என்ற படத்தில் நடித்தார். தற்போது, `பப்பரபாம்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். வினோத் கிஷான் ஜோடியாக இஷாரா நாயர் நடித்துள்ள இந்த படம் இன்னமும் ரிலீசாகவில்லை.
இந்நிலையில், இஷாரா நாயருக்கு துபாய் வாழ் இந்தியர் சாஹில் என்பவருடன் திருமணம் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களது திருமணம் கடந்த 18-ஆம் தேதி நடந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.