சினிமாவில் பெயரும் புகழும் கொண்ட சில பிரபலங்களின் வாழ்க்கையில் சில திகிலான சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. ஹிந்தி சினிமாவை சேர்ந்தவர் இளம் நடிகை மீனாட்சி தாபா.
கடந்த 2012ல் இவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் பின்னணியில் துணை நடிகர்கள் அமித், பீர்த்தி என 2 பேரை போலிசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் இருவரும் தான் மீனாட்சியை கடத்தியுள்ளனர் என தெளிவானது. மும்பையிலிருந்து உத்திர பிரதேசத்திற்கு அழைத்து சென்று அங்கிருந்து வேறொரு இடத்திற்கு மீனாட்சியை கடத்தினார்களாம்.
இதில் மீனாட்சியின் குடும்பத்தாரிடம் பணம் கேட்டு மிரட்டுயுள்ளனர். அவர்கள் பணம் கொடுக்காததால் மீனாட்சியை கொலை செய்துள்ளனர்.
மேலும் அவரின் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முற்பட்ட போது இருவரையும் போலிசிடம் சிக்கினார்களாம். தற்போது மும்பை குற்றவியல் நீதிமன்றம் அவர்கள் இருவரையும் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. மேலும் தண்டனை பற்றிய விபரங்களை வரும் மே 10 வெளியிட முடிவு செய்துள்ளது.