அமெரிக்காவைச் சேர்ந்த ஆந்தைக்குட்டி ஒன்று இன்டர்நெட்டில் தன் சின்ன சின்ன சேட்டைகளால் ஹீரோவாகியுள்ளது.
கொலரடோ மாநிலத்தில் உள்ள பவுல்டர் கவுண்டியைச் சேர்ந்த போலீஸ் ஒருவர் ரோந்து பனியின் போது சாலையின் நடுவே இந்த ஆந்தைக்குட்டியைப் பார்த்தார். பார்ப்பதற்கு அழகாகவும், சின்ன சின்ன சேட்டைகள் செய்தபடியும் நின்று கொண்டிருந்த ஆந்தைக்குடியிடம் சென்று அடுத்து என்ன பண்ணப் போறீங்க? (“What’s up?”) என்று கேட்டார். உடனே தலையை அழகாக ஆட்டிக் காட்டி, சில போட்டோக்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு, பின் அது பறந்து போய்விட்டது.
சோஃபி பெர்மன் என்ற அந்த காவல் அதிகாரி தனது உடலில் உள்ள கேமராவைக் கொண்டு அந்த ஆந்தைக்குட்டியைப் படம்பிடித்து ட்விட்டரில் பதிவேற்றினார். அதை 32 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 3 ஆயிரம் பேர் ரீ ட்வீட் செய்துள்ளனர்.
இதோ அந்த ஆந்தைக்குட்டியின் வைரல் வீடியோ: