மேற்குவங்க மாநிலத்தின் 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நான்கு பேர் உணவு சாப்பிட சென்றனர். அவர்கள் நான்கு பேரும் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர்.
சாப்பிட்டு முடித்ததும் அவர்கள் ஆர்டருக்கான பில்லை கொடுத்துள்ளனர். அதில் ஒரு பிளேட் பிரியாணியின் விலை 190 ரூபாய் என போடப்பட்டிருந்து. இதையடுத்து அவர்கள் நால்வரும் உணவக உரிமையாளர் சஞ்சய் மொண்டால் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒருவர் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து சஞ்சயை சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையில் தொடர்புடைய நான்கு பேரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், இந்த கொலைக்கு பிரியாணியின் விலை காரணமாக இருக்காது என சந்தேகிப்பதாக கூறியுள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.