கமல் ஹாசனிடம் ஒரு பேட்டியில் அவரது மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன் பற்றி கேட்கப்பட்டது. கமலின் அரசியல் வருகை பற்றி அவர்கள் கருத்து என்ன? மகள்களுக்கு அறிவுரை தருவீர்களா? என்று கேட்டதற்கு ‘நான் அரசியலுக்கு வருகிறேன் என்றதுமே சின்ன பயம் அவர்களுக்குள் இருந்தது. நான் தைரியம் கூறினேன்.
அது இயல்பாகவே குடும்ப உறுப்பினர்களுக்கு தோன்றும் பயம்தான். அவர்களுக்கு நான் எந்த அறிவுரையோ ஆலோசனையோ கூற மாட்டேன். ஏதாவது தேவைப்பட்டு அவர்களே கேட்டால் மட்டுமே கூறுவேன். நான் என்னுடைய இளவயதில் யாருடைய அறிவுரையையோ ஆலோசனையையோ ஏற்று நடந்ததில்லை.
எல்லாமே என்னுடைய சுயமுடிவு தான். நான் என் மகள்களுக்கு என்ன சுதந்திரம் கொடுத்து இருக்கிறேனோ அது என் பெற்றோர் எனக்கு கொடுத்தது’ என்று கூறி இருக்கிறார்.