தென்னிந்திய சினிமாவில் நடிகைகளின் சம்பளம் ஹீரோக்களுடன் ஒப்பிடுகையில் மிக குறைவாக இருப்பதாகவே பலமுறை பேச்சு வருகிறது.
இந்நிலையில் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த பாரத் அனே நேனு (தமிழில் -பரத் எனும் நான்) என்ற படத்தில் நடித்த பாலிவுட் நடிகை கியாரா அத்வானி தற்போது சம்பளம் தொடர்பாக புதிய புகார் கூறியுள்ளார்.
இந்த படத்திற்காக அவருக்கும், இயக்குனருக்கும் சம்பளம் முழுமையாக கொடுக்கவில்லையாம். 2018ல் தெலுங்கில் அதிக வசூல் ஈட்டிய இந்த படம் தயாரிப்பாளருக்கு அதிக லாபத்தை கொடுத்துள்ளது என கூறப்படும் நிலையில், சம்பளம் கொடுக்காமல் உள்ளது சினிமா துறையில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துளளது.