சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 11 வயது சிறுமியை அங்கு பணிபுரியும் 16 பேர் வன்புணர்வு செய்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை அயனாவரத்தில் சுமார் 350 வீடுகள் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 11 வயதான சிறுமி சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் 7 ஆம் வகுப்பு படிக்கிறார். இந்நிலையில், அங்கு ‘லிப்ட்’டை இயக்கும் ஊழியர்கள் 4 பேர் முதலில் அந்த சிறுமியை வன்புணர்வு செய்துள்ளனர்.
பிறகு அக்குடியிருப்புக்கு பல்வேறு வேலைகளுக்காக வந்த பிளம்பர்கள், எலெக்ட்ரீசியன்கள் உள்ளிட்ட மொத்தம் 16 பேர் கடந்த 6 மாதங்களாக ஒவ்வொருவராக தங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் அந்த சிறுமியை வன்புணர்வு செய்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.