இன்று ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மத்தியில் ஆளும் பிரதமர் மோதி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக தி இந்து (தமிழ்) செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே, பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் முனைப்பில் தெலுங்கு தேசம் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், மற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நடப்பு கூட்டத்தொடரிலேயே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என்று தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே அறிவித்துள்ளன.
இது தொடர்பாக இவ்விரு கட்சிகளும் இன்று மக்களவைச் செயலாளரிடம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது குறித்து மனு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.