ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் பிரபல சீரியல் “செம்பருத்தி”. இந்த சீரியலில் வந்த ஒரு காட்சி இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் இருந்ததாக கூறி வழக்கறிஞர் ஒருவர் தற்போது பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
ஒரு குறிப்பிட்ட காட்சியில் இந்து கடவுளான ராமர் மற்றும் சீதை ஒன்றாக இருக்கும் சிலையை கீழே போட்டு உடைப்பது போல காட்டப்படுகிறது.
இது இந்து கடவுளை அவமதிக்கும் ஒரு செயல் என கூறி திருப்பூர் காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் ஈஷ்வரமூர்த்தி என்பவர் புகார் அளித்துள்ளார்.