உலகிலேயே அதிக விலை உயர்ந்த பாரம்பரிய மருத்துவ குணம் வாய்ந்த காளான் தான் யர்சாகும்பா என்று அழைக்கப்படுகிறது.
இமயமலையிலுள்ள வயகரா என்று இதனை கூறுகின்றனர்.
இதை தேடி ஆயிரக்கணக்கான நேபாள மக்கள் இமயமலையின் உயரமான இடங்களில் சில மாதங்கள் கழிக்கின்றனர்.
பாலுணர்வை தூண்டும் குணங்களுக்கு அப்பாற்பட்டு, ஆஸ்துமா முதல் புற்றுநோய் வரை பல நோய்களை இந்த காளான் குணமாக்க முடியும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.