லஞ்சம் வாங்குபவருக்கு மட்டுமின்றி, லஞ்சம் கொடுப்பவருக்கும் முதல் முறையாக தண்டனை வழங்கப்பட உள்ளது. இதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
லஞ்சம் வாங்குவது மட்டுமின்றி, லஞ்சம் கொடுப்பதும் குற்றமாகும். லஞ்சம் கொடுப்பவர்கள் தண்டிக்கப்படுவது, இதுவே முதல்முறை ஆகும். அதற்காக இந்த திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், அரசின் பொறுப்புடைமையை அதிகரிக்கவும், சட்டத்தின் ஷரத்துகளை கடுமை ஆக்கவும் இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது என்று மசோதாவை தாக்கல் செய்த இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.