தமிழ் சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் அசைக்க முடியாத இடத்தை பிடித்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.
கடைசிவரை செல்வி ஜெயலலிதாவாகவே இருந்தாலும் அவர் மீது பல காலகட்டங்களில் சர்ச்சை எழும்பியுள்ளது. அதிலும் அவர் இறந்த பின்பு அரசியல் வாரிசு என பலர் கூறி வருகின்றனர்.
அதைவிட மோசமாக அவருக்கு பிறந்த வாரிசே நான் தான் என சிலர் கூறினர். அதில் அம்ருதா என்பவரும் தான் வாரிசு என வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஆனால் இதை மறுத்த அரசாங்கம் அம்ருதா பிறந்ததாக கூறும் 1980 வது வருடத்தில் ஜுலை மாதத்தில் நடந்த பிலிம்பேர் விருது விழாவில் ஜெயலலிதா கலந்து கொண்ட வீடியோ ஆதாரத்தை சமர்பித்துள்ளனர்.
இதில் அவர் கர்ப்பமாக இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை எனவும் இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் எனவும் வாதாடியுள்ளனர்.