கடுமையான நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், உறுப்பு நாடுகள் தாங்கள் செலுத்த வேண்டிய பங்குத் தொகையை உடனே அனுப்பி வைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தலைவர், அன்டோனியோ குட்டெரஸ் கடிதம் எழுதி உள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
உறுப்பு நாடுகள் தாங்கள் செலுத்த வேண்டிய பங்குத் தொகையை உரிய காலத்தில் செலுத்தவில்லை என்பதால் சபையின் முக்கிய நடவடிக்கைகளுக்கு கூட பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா சில மாதங்களுக்கு முன், 123 கோடியை செலுத்தி உள்ளது. ஆனால், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பிரேசில், எகிப்து, இஸ்ரேல் உள்ளிட்ட 81 நாடுகள் இன்னும் தங்கள் நிலுவைத் தொகையை செலுத்தவில்லை என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தி கூறுகிறது.