இதற்காக ஒவ்வொரு பாடசாலைக்கும் ´டேப்-லெட்´ வழங்கப்பட்டு இருக்கிறது. அதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும்.
இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு இதுவரை 51 ஆயிரம் பாடசாலைகளுக்கு ´டேப்-லெட்´டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ´டேப்-லெட்´டுகள் இணைய தள வசதியுடன் செயல்படும்.
துர்க், சுர்குஜா, பாஸ்டர் ஆகிய மாவட்டங்களில் வழங்கிய ´டேப்- லெட்´டுகளை ஓப்பன் செய்தவுடனேயே ஆபாச படங்கள் திரையில் தோன்றி ஓடுகின்றன.
இதுபற்றி தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே, மறு உத்தரவு வரும் வரை இந்த ´டேப்-லெட்´டுகளை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு வழங்கிய ´டேப்- லெட்´டில் எப்படி ஆபாச படங்கள் வந்தது? என்பது தெரியவில்லை.
இது சம்பந்தமாக சத்தீஸ்கர் மாநில தகவல் தொழில்நுட்ப துறை திட்ட மேலாளர் நிலேஷ் சோனி கூறும் போது, குறிப்பிட்ட ´டேப்-லெட்´டுகளில் யாராவது ஆபாச படம் பார்த்திருக்க வேண்டும். அல்லது டவுன் லோடு செய்திருக்க வேண்டும்.
அதை பார்த்து கொண்டு இருக்கும் போதே சில விளம்பரங்கள் தோன்றும். அதை ´கிளிக்´ செய்தால் இவ்வாறு ´டேப்-லெட்´டுகளையே ஆக்கிரமித்து ஆபாச படம் தானாகவே தோன்ற ஆரம்பித்து விடும்.
இப்படித்தான ´டேப்- லெட்´டில் ஆபாச படம் வந்துள்ளது. இவற்றை நீக்குவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக சென்னையில் இருந்து நிபுணர் குழு அழைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் சரி செய்தபிறகு பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்று கூறினார்.