ஜம்மு மாவட்டத்தின் பத்தின்டி பகுதி வழியாக சிலர் போதைப் பொருட்களை கடத்தி செல்லப் போவதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து, சந்தேகத்தின்பேரில் பொலிஸார் இருவரை மடக்கி பரிசோதனை செய்தபோது அவர்கள் சுமார் 50 கிலோ ஹெரோயின் வைத்திருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் குர்ஜீத் சிங், ரவிக்குமார் ஆகியோரை கைது செய்த பொலிஸார் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.