பிரபல சிங்கள நடிகையும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மாகாண சபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருமாகிய நதீசா ஹேமமாலி மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார ஆகியோர் நெருக்கமாக இருந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
உதித் லொக்குபண்டார முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் வி.ஜே.மு.லொக்குபண்டாரவின் மகனாவார்.
இவர் நதீஷாவை மடியில் வைத்திருப்பதும் அவரது தலைபகுதியில் முத்தம் இடுவதும் கட்டி அணைப்பதும் போன்ற படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளதால் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உதில் லொக்குபண்டார எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.